பொங்கலோ பொங்கல் என்று குதுகூலமாகக் கொண்டாடிய நாட்கள் நினைவில் வந்து போகின்றன. பொங்கல் வந்து விட்டாலே வீடு களைகட்டி விடும். ஒரு மாதம் முன்பே வெள்ளையடிப்பு நடக்கும். வீட்டு சாமான்கள் ஒதுங்க வைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் போது மறந்து போன விளையாட்டுச் சாமான்கள், இதர பொருட்கள் மாட்டும் போது கிடைக்கிற சந்தோஷம்...ஆகா..அனுபவித்தால்தான் தெரியும்...
அது போல், பொங்கலுக்கு முதல் நாள், வாசலில் செம்மண் கோலம் போட்டு அதற்கு பார்டராக சுண்ணாம்பு அல்லது கோலப்போடி போடுவதும், யார் வீட்டுக் கோலம் நல்லா இருக்குங்கிற போட்டியும் பொங்கலுக்கு சுருதி சேர்க்கும். பொங்கல் சாமான்கள் வாங்க சந்தைக்குப் போய் பேரம் பேசி வாங்குவது சுவாரசியம். பொங்கல் அன்று அதிகாலையிலேயே வீடும் தெருவும் களை கட்டி விடும்..அக்கா உங்க வீட்டுல பொங்கல் பொங்குச்சா என்ற பாசமான அக்கம் பக்கத்து வீட்டு விசாரிப்புகள்...(இப்போ எல்லாம் இப்படி விசாரிக்கிறாங்களா?...அக்கம்பக்கதுல யார் இருக்காங்க என்கிறதே பெரும்பாலும் தெரியாமல் போய் விட்டதே...பின் எங்கிருந்து விசாரிக்க!!)
சூரிய உதயத்தின் போது பூசை நடக்கும். மதியம் பொங்கல் சோறு, சர்க்கரைப் பொங்கல், பல்வகை காய்கறிகள்...சுவையோ சுவை. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். வீட்டில் உள்ள மாடுகளுக்குக் கொண்டாட்டமான ஒரே நாள். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு...ஒரே ராஜ உபச்சாரம்தான்.
அடுத்தது, சிறுவீட்டுப் பொங்கல். செம்மண்ணில் காம்பவுண்டுடன் வீடு அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும். வாண்டுகளுக்கு உகந்த பொங்கல் இது..(இந்தப் பொங்கல் அனேகமாகக் காணாமல் போய் விட்டதோ!)
மூன்று நாட்கள் களை கட்டியிருக்கும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்று கனவு போல் இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஊரில் இருந்தாலும் வாசலில் பொங்கல் வைப்பது தொடர்ந்தது. என் அம்மாவால் முடியாததால், இப்போது காஸ் அடுப்புப் பொங்கலாக மாறி விட்டது. ஆனால், தற்போது பெரும்பாலும் நகரங்களில் பொங்கல் கொண்டாட்டம் வீட்டின் உள்ளேயே முடிந்து விடுகிறது. இன்றையக் குழந்தைகள் நாங்கள் எல்லாம் சிறுவயதில் அனுபவித்த குதுகூலப் பொங்கல் கொண்டாட்டத்தை இழந்து விட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது...
அது போல், பொங்கலுக்கு முதல் நாள், வாசலில் செம்மண் கோலம் போட்டு அதற்கு பார்டராக சுண்ணாம்பு அல்லது கோலப்போடி போடுவதும், யார் வீட்டுக் கோலம் நல்லா இருக்குங்கிற போட்டியும் பொங்கலுக்கு சுருதி சேர்க்கும். பொங்கல் சாமான்கள் வாங்க சந்தைக்குப் போய் பேரம் பேசி வாங்குவது சுவாரசியம். பொங்கல் அன்று அதிகாலையிலேயே வீடும் தெருவும் களை கட்டி விடும்..அக்கா உங்க வீட்டுல பொங்கல் பொங்குச்சா என்ற பாசமான அக்கம் பக்கத்து வீட்டு விசாரிப்புகள்...(இப்போ எல்லாம் இப்படி விசாரிக்கிறாங்களா?...அக்கம்பக்கதுல யார் இருக்காங்க என்கிறதே பெரும்பாலும் தெரியாமல் போய் விட்டதே...பின் எங்கிருந்து விசாரிக்க!!)
சூரிய உதயத்தின் போது பூசை நடக்கும். மதியம் பொங்கல் சோறு, சர்க்கரைப் பொங்கல், பல்வகை காய்கறிகள்...சுவையோ சுவை. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். வீட்டில் உள்ள மாடுகளுக்குக் கொண்டாட்டமான ஒரே நாள். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு...ஒரே ராஜ உபச்சாரம்தான்.
அடுத்தது, சிறுவீட்டுப் பொங்கல். செம்மண்ணில் காம்பவுண்டுடன் வீடு அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும். வாண்டுகளுக்கு உகந்த பொங்கல் இது..(இந்தப் பொங்கல் அனேகமாகக் காணாமல் போய் விட்டதோ!)
மூன்று நாட்கள் களை கட்டியிருக்கும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்று கனவு போல் இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஊரில் இருந்தாலும் வாசலில் பொங்கல் வைப்பது தொடர்ந்தது. என் அம்மாவால் முடியாததால், இப்போது காஸ் அடுப்புப் பொங்கலாக மாறி விட்டது. ஆனால், தற்போது பெரும்பாலும் நகரங்களில் பொங்கல் கொண்டாட்டம் வீட்டின் உள்ளேயே முடிந்து விடுகிறது. இன்றையக் குழந்தைகள் நாங்கள் எல்லாம் சிறுவயதில் அனுபவித்த குதுகூலப் பொங்கல் கொண்டாட்டத்தை இழந்து விட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது...
No comments:
Post a Comment